Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 30, 2017

    ஆகஸ்டில் மீண்டும் போராட்டம் அரசு ஊழியர்கள் அறிவிப்பு

    ''பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையை, ஜூலைக்குள் நிறைவேற்றாவிடில் ஆகஸ்டில் போராட்டத்தை தவிர்க்க முடியாது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் அன்பரசு தெரிவித்தார். 

    மதுரையில் அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் பேசினர். அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம், இடைக்கால நிவாரணம் வழங்கும் நிலை உருவாகாமல் சம்பள கமிஷன் அமைப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஜூலைக்குள் ஆய்வு நடத்தி நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர்கள், அரசு செயலர்கள் ஏற்றுக் கொண்டனர். அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். பேச்சில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை, ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் ஆகஸ்டில், மீண்டும் காலவரையற்ற போராட்டம் நடக்கும்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: