குளித்தலை: துவக்க, உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பணி விபரம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
குளித்தலை வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களது பணி சார்ந்த ஆவணங்களை (எஸ்.ஆர்.,) ஆண்டுதோறும் புதுப்பிப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, கண்காணிப்பாளர் பாண்டிகண்ணன் பதிவு செய்தார். இதில், குளித்தலை ஏ.இ.இ.ஓ. ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment