Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 8, 2017

    கல்விக் கட்டணக்குழு தலைவர் நியமனம் தாமதம்!

    தமிழ்நாடு தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை உறுதியளித்தபடி நியமிக்காததால், அரசுக்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில் உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக இணைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


    மதுரை ஆண்டாள்புரம் கார்த்தி தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. சென்னையில் அதன் அலுவலகம் ஆறு மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது என தினமலர் நாளிதழில் 2016 ஜூன் 17ல் செய்தி வெளியானது.

    தமிழகத்தில் 12 ஆயிரம் மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளன. கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளதால் 2016--17க்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. 

    தனியார் பள்ளிகள் 

    தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கின்றன. தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 

    2016 அக்.,3ல் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ’தலைவரை நியமிப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க, மேலும் 4 வாரங்கள் அவகாசம் தேவை’ என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர். இதுவரை தலைவரை நியமிக்கவில்லை.

    பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா (நேற்றுமுன்தினம் இடமாற்றப்பட்டார்), மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் பிச்சை மீது நீதிமன்ற அவமதிப்பின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். 

    நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு, ’தற்போது பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுஉள்ளனர். 

    எனவே, இவ்வழக்கில் உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களை, மனுதாரர் இணைக்க வேண்டும். விசாரணை மார்ச் 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது.

    No comments: