Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 7, 2014

    மாணவியரை ஆபாசமாக படம் பிடித்ததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

    மாணவியரை, ஆசிரியரே ஆபாசமாக படம் எடுப்பதாக கூறி, அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே, கெம்பநாயக்கன் பாளையத்தில், பா.சுந்தரம்செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆசிரியர் வினோத்குமார், 35, என்பவர், தன் மொபைல் போனில், மாணவியரை ஆபாசமாக படம் எடுப்பதாக கூறி, நேற்று காலை, பள்ளியை, பெற்றோர் முற்றுகையிட்டு, வினோத்குமாரை தாக்கினர்.
    தலைமை ஆசிரியர் அமல்ராஜ், "இதுகுறித்து, எனக்கு ஏதும் தெரியவில்லை. புகார் வரவில்லை. தற்போது தான், பெற்றோர் கூறுகின்றனர்,” எனக் கூறி, நழுவினார். சி.இ.ஓ., அய்யண்ணன் கூறுகையில், "பள்ளி திறந்து, ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆசிரியர் வினோ, மூன்று மாதமாக படம் எடுத்தாக கூறுவது குழப்பமாக உள்ளது. ஆசிரியர் வினோ, சில மாணவரை அடித்ததாகவும், அதனால், பெற்றோர், இவ்வாறு கூறுவதாகவும் சொல்கின்றனர். முழுமையாக விசாரித்து, உண்மை இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

    No comments: