Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 25, 2014

    தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் கூடுதலாக ஒரு ஆசிரியை நியமனம்

    தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், வான்பாக்கம் பள்ளிக்கு, தற்காலிகமாக கூடுதலாக ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம், வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவிபெறும் துவக்கப் பள்ளியில் 71 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக் கட்டடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய தானே புயலில் முற்றிலும் சேதமானது.
    இதுவரை புதிதாக கட்டடம் கட்டப்படாததால், அங்குள்ள சமுதாய கூடத்திலேலே வகுப்புகள் நடக்கிறது. ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் இப்பள்ளியில், தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். ஒரு ஆண்டுக்கு முன் ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு ஆசிரியர் நியமிக்கவில்லை.தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு முன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்கு பதிலாகவும் வேறு தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார்.

    ஒரு ஆசிரியை மட்டுமே உள்ளதால் ஒழுங்காக பாடம் நடத்த முடியவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. இவர் விடுமுறை எடுத்தால் அன்று பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபற்றி அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். உடனடியாக கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    அதைத் தொடர்ந்து பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை பள்ளியில் பணியாற்றிய டெல்சி என்ற ஆசிரியை, தற்காலிகமாக ஒரு வாரம் மட்டும் வான்பாக்கம் பள்ளிக்கு டெபுடேஷனில் அனுப்பப்பட்டுள்ளார். மாணவர்கள் நலன் கருதி நிரந்தரமாக ஆசிரியரை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    No comments: