Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 26, 2014

    சி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்?

    தமிழ்நாட்டில் பல கல்வித்திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக இரு கல்வித்திட்டத்தின் கீழ்தான் சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தமிழக கல்வித்திட்டம் அதாவது சமச்சீர் கல்வித்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மத்திய செகண்டரி போர்டு கல்வித்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள். இந்த பள்ளிக்கூடங்களை பொதுவாக சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் என்றே அழைப்பார்கள்.
    இதில், சில பள்ளிக்கூடங்கள் மத்திய அரசங்கமே நடத்தும் கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் தனியாராலேயே நடத்தப்படுகின்றன. இந்தப் பள்ளிக்கூடங்களை சாதாரண, ஏன் ஏழை–எளிய மக்கள் மட்டுமல்லாமல், குறைந்த வருவாய் பெரும் சாதாரண நடுத்தர மக்கள்கூட நினைத்துப்பார்க்க முடியாது. முன்பெல்லாம் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்தியா முழுவதிலும் இடமாறுதலுக்கு வாய்ப்பு உள்ள பெற்றோர்கள்தான் செல்வார்கள். ஏனெனில், இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இருக்கும் நிலையில், ஒரே கல்வித்திட்டம் என்பதால் எந்த மாநிலத்துக்கு பணிநிமித்தமாக இடமாறுதல் செய்யப்பட்டாலும், அங்கு போய்தங்கள் குழந்தைகளை எந்த கஷ்டமும் இல்லாமல் பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கைதான்.

    ஆனால், காலப்போக்கில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள்மீது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஒரு மோகம் ஏற்பட்டுவிட்டதால், அந்த பள்ளிக்கூடங்களுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. இதன்காரணமாக வணிக ரீதியிலும் தனியார் ஏராளமான பள்ளிக்கூடங்களைத்தொடங்குகிறார்கள். 2001–2002–ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 6,293 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தை எட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக பள்ளிக்கூடங்கள் தொடங்கவேண்டும் என நினைக்கும் தனியாரில் பெரும்பாலானோர் இந்த சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களைத்தொடங்கவே விண்ணப்பிக்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 499 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இருந்தன. இதில், 122 பள்ளிக்கூடங்கள் சென்னையில் இருக்கிறது. இந்த ஒரே ஆண்டில் மட்டும் புதிதாக 80 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு நிச்சயமாக அதைவிட அதிகமாக புதிதாக இந்த பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும். இப்படி எல்லோருக்கும் சி.பி.எஸ்.இ. மோகம் ஏன் இருக்கிறது என்று கேட்டால், பல காரணங்கள் உலா வருகின்றன. கல்வி முறையிலும், நிர்வாகத்திலும் ஏற்பட்டுள்ள சீர்திருத்தம், இந்த பள்ளிக்கூடங்களெல்லாம் மாணவர்களை ஒரு நட்புறவோடு நடத்தும் பாங்கு என்று பள்ளிக்கூடங்கள் தரப்பில் கூறப்படுகிறது. பெற்றோர்கள் தரப்போ, அகில இந்திய அளவில் பல போட்டித்தேர்வுகளை இந்த கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளமுடிகிறது, ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களின் கணக்கைப்பாருங்கள், மொத்த மாணவர்களில் எத்தனை சதவீதம் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் படித்தவர்களாக இருக்கிறார்கள்? என்பதைப் பார்த்தாலேயே புரிந்துவிடும். 

    மேலும், இந்த கல்வித்திட்டத்தில் 8–வது வகுப்புவரை மும்மொழி திட்டம் அமல் நடத்தப்படுகிறது. ஆங்கிலம் தவிர, வேறு இருமொழிகளைப் படிக்கமுடியும், இதுபோல 9–வது வகுப்பில் இருந்து பிளஸ்–2 படித்து முடிக்கும்வரை ஆங்கிலம் பாடமொழி என்பதோடு விருப்பப்பட்ட மொழியைப்படிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன்காரணமாக படித்து முடித்தவுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்கிறார்கள். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இவை அனைத்தையும் மறுக்கிறார். இதெல்லாம் மாயைதான், தனியார் பள்ளிக்கூடங்கள் தங்களை வணிக ரீதியாக வளப்படுத்திக்கொள்ள பரப்பிய ஒரு தவறான கருத்து என்று சொல்லும் அவர், ஒரு உண்மையை மறைக்கவில்லை. ‘சிலபஸ்’ என்று சொல்லப்படும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் இருகல்வி முறைகளுக்கும் மாற்றம் இல்லை, ஆனால், பாடநூல் தயாரிப்பிலும், கல்வி முறையிலும்தான் மாற்றம் இருக்கிறது என்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிக்காமல் என்னென்ன வகையான தவறுகளுக்கு என்னென்ன வகையில் கண்டிக்கலாம்? என்று வழிமுறைகளை வகுத்துக்கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறைகளெல்லாம் மாணவர்களை துன்புறுத்தாமல் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தும் வகையில் இருக்கிறது. 

    தமிழக அரசை பொறுத்தமட்டில், ஆசிரியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தில் நல்ல சம்பளம் கொடுக்கிறது. கல்வித்துறையும் சி.பி.எஸ்.இ. நடைமுறைப்படுத்தும் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, மாணவர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடநூல்களைத்தயாரித்து கற்பிக்கும் முறையிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்.

    No comments: