Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 28, 2014

    சத்துணவு சாம்பாரில் விழுந்த சிறுமி சாவு: பள்ளியில் 3 பேர் இடைநீக்கம்

    ராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மூவரை மாவட்ட ஆட்சியர் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

    ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகள் பிரியதர்ஷினி (3). இவர் இங்குள்ள தனியார் மழலையர் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஜூன் 20ஆம் தேதி பள்ளியில் மதிய உணவு நேரத்தில் சத்துணவு சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பாரில் பிரியதர்ஷினி தவறி விழுந்தார். உடனடியாக சிறுமியை, மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் சத்துணவு சமைக்கும்போது கவனக் குறைவாக பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர் இந்திரா, சமையலர் திருக்கோடி, சமையல் உதவியாளர் சுந்தரலட்சுமி ஆகிய மூவரை தாற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.

    No comments: