Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 7, 2014

    பி.எப். வட்டி 9 சதவிகிதமாக அதிகரிக்கும்?

    ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கான வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டில் (2014-15) 9 சதவிகிதமாக அதிகரிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

    கடந்த நிதியாண்டில் (2013-14) இந்த வட்டி விகிதமானது 8.75 சதவிகிதமாக இருந்தது. வட்டி உயர்வு அதிகரிப்பதன் மூலம் சுமார் 5 கோடி பி.எப். சந்தாதாரர்கள் பயனடைவர் என ஊழியர் வருங்கால வைப்புத் நிதித் திட்ட நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    நடப்பு நிதியாண்டில் பி.எப். முதலீட்டுக்கான வட்டியை 9 சதவிகிதம் வழங்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது. பங்குச் சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்தியில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு தளங்களில் செய்யப்படும் முதலீடு மூலம் இந் நிறுவனம் அதிக வருவாயை ஈட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் இவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஈ.பி.எப்.ஓ. எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்ட நிறுவனம் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியை நிர்வகித்து வருகிறது. மேலும், இந் நிறுவனம், கடந்த நிதியாண்டில், தமது சந்தாதாரர்களிடமிருந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இண்கிரிமெண்டல் டெபாசிட்டாக ரூ.71,195 கோடியைப் பெற்றுள்ளது. இது 2012-13ஆம் நிதியாண்டில் வசூலித்த ரூ.61,143 கோடியை விட 16 சதவிகிதம் அதிகமாகும்.

    மேலும், இந் நிறுவனம் சிறப்பு டெபாசிட் திட்டத்தின்கீழ் முதலீடு செய்துள்ள ரூ.55,000 கோடியையும் பெற்று, பல்வேறு இனங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இத் தொகைக்கு அரசு வட்டியாக 8 சதவிகிதமே அளிக்கிறது. இது மற்ற இனங்களில் செய்யப்படும் முதலீட்டில் கிடைக்கும் வட்டியை விட குறைவானதேயாகும் எனவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும், கடந்த ஆண்டு மத்திய தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பையடுத்து, இந் நிறுவனம் தமது முதலீட்டின் மீதான வருவாய் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறது.

    புதிய முறைப்படி, இந் நிறுவனம், தமது நிதியில் 55 சதவிகிதம் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இதர பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மேலும், 5 சதவிகிதத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதாவது, பரஸ்பர நிதித் திட்டம், பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

    மேலும், 55 சதவிகிதம் வரை அரசு வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: