தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 14 வரை நடைபெறுகின்றன. முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இப்போது தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே நேரடியாகச் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment