தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் செ.முத்துசாமி Ex.MLC., தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள காலை முதல் முயற்சி செய்தும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை. மாலை இயக்குனரே தொடர்பு கொண்டு பேசிய போது மாறுதல் கலந்தாய்வு நாட்கள் குறித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து வினவினார். அதற்கு இய்க்குனர் தமக்கே இச்செய்திகள் குறுந்தகவல், மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றதை கூறினார்.
பின்னர் இதுவரை மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு தேதிகள் குறித்த அரசாணை எதுவும் வெளியிடப்படாத நிலை குறித்தும், அவ்வாறு அறிவிக்கப்பட்டால் தினசரி நாளிதழ்களுக்கும், சங்கப்பிரதிநிதிகளுக்கும் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். எனவே முறையானஅறிவிப்புமற்றும் அரசாணை வரும் வரை அதுபற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் எனபொதுச்செயலர் ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறார்
No comments:
Post a Comment