Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 23, 2014

    தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை?

    தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்வி உதவித் தொகை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ,மாணவிகளின் இடைநிற்றல் கல்வியை தவிர்க்க, ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வழங்குகிறது. இத்தொகை ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியில் அவரவர் வங்கிக் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். 2013-14ம் கல்வியாண்டு முடியும் தருவாயில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 5 ஆயிரத்து 660 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பெயர், வங்கி சேமிப்பு கணக்கு எண் விவரங்களை நேரில் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னரே இடை நிற்றல் உதவித் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க, அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: