"படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கிறது" என சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.
சிவகாசி மெப்கோ சிலாங் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், அவர் பேசியதாவது: உலகம், இளைய தலைமுறையிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறது. இந்தியா, உலக நாடுகளுடன் போட்டிபோட்டு, வேகமாக வளர்ந்து வருவதால், படித்து முடித்து வரும் மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் உள்ளன.
உயர் கல்வி கற்பதால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது. படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, வாழ்க்கையில் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கிறது. வாய்ப்புகள் வரும் நேரத்தில், ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பை பெறுவதற்கு, தொடர் முயற்சி அவசியம்.
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மாணவர்களில், பெருமளவு மெப்கோ இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உள்ளனர் என்பதில் பெருமையாக உள்ளது என்றார். தாளாளர் டென்சிங் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். முதல்வர் அறிவழகன் வரவேற்றார். விழாவையொட்டி, மெப்கோ, அஜிலென்ட் கம்பெனி இணைந்து, ஆர்.எப். சர்கியூட் மற்றும் ஆண்டனா ஆய்வு உருவாக்க , ரூ.3.5 கோடியில் மையம் அமைக்கப்பட்டது. இதை ஐ.ஐ.டி. இயக்குனர் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment