Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 1, 2014

    சிறந்த இன்ஜினியர்களை அளிப்பதில் வட இந்தியா முன்னோடி

    சிறந்த இன்ஜினியர்களை அளிப்பதில் வடஇந்திய மாநிலங்கள் குறிப்பாக டில்லி மற்றும் பீகார் முன்னிலை வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு்ள்ளது.

    ஆஸ்பிரிங் மைண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களி்ல் உள்ள 520 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

    டில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் மேற்கு இந்திய பகுதியை சேர்ந்த கல்லூரிகள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரிகளை கொண்ட மாநிலங்களாக திகழும் தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்கள் குறைந்த வேலைவாய்ப்பை மட்டுமே வழங்கி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காளான்களை போன்று நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதிகளவு இன்ஜினியர்கள் உருவாகும் நேரத்தில் குறைந்த அளவே வேலை திறன் மி்க்க இன்ஜினியர்கள் உருவாகின்றனர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: