பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, முறையே மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு, தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய, மாணவ, மாணவியருக்கான, "தத்கல்" திட்ட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கு, வழக்கமான தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த உடன், "ஹால் டிக்கெட்" வழங்கப்படும்.
"இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment