Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    டான்செட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

    அண்ணா பல்கலை, இந்த கல்வியாண்டுக்கான "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு(டான்செட்)" தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு, எம்.பி.ஏ/எம்.சி.ஏ/எம்.இ/எம்.டெக்/எம்.ஆர்க்/எம்.பிளான்., போன்ற தொழிற்
    படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை, அதன் அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு மற்றும் உதவிபெறும் இன்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் போன்றவற்றில், இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

    கல்வித் தகுதி: எம்.பி.ஏ., படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், பிளஸ் 2விற்கு பின், மூன்றாண்டு பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பிற்கு, பிளஸ் 2, பட்டப் படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மற்ற படிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களோடு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வகுப்பு வாரி அடிப்படையில், 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு உண்டு. மேலும் கல்வித்தகுதிகள் பற்றி அறிய http://www.annauniv.edu/tancet2013/eligibility.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பக்கட்டணமாக (எஸ்.சி/எஸ்.டி., 250, மற்றவர்  500 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விருப்பமுள்ளவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்களின் நகல், டிடி போன்றவற்றுடன் பல்கலையின் ரிஜிஸ்ட்ரேஷன் மையத்திற்கு பிப்.,26க்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது http://www.annauniv.edu/tancet2013/ என்ற பல்கலை இணையதள முகவரியில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்த படிவத்தை பிரின்ட் அவுட் செய்து, டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, பல்கலை முகவரிக்கு பிப்.,28க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

    எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏப்., 06 அன்று காலையும், எம்.சி.ஏ., படிப்பிற்கு ஏப்., 06 அன்று மாலையும், மற்ற படிப்புகளுக்கு ஏப்.,07 அன்று காலையும் தேர்வு நடைபெறும்.

    No comments: