Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    டி.இ.டி தமிழ் வினா - விடை: பாம்புகள்

    *   விவசாயிகளின் நண்பன் - பாம்பு.

    *   உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.
    *   பாம்புப் பண்ணை அமைந்துள்ள இடம் - சென்னைக்கு அருகே கிண்டி.

    *   பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் குட்டிப்போடும்.

    *   உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு - ராஜநாகம்(இந்தியா). இதன் நீளம் 15 அடி. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு. இவை மற்ற பாம்புகளை கூட உணவாக்கிக் கொள்ளும்.

    *   பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும் - இரையை விழுங்கும், மென்று தின்பதில்லை.

    *   பாம்பு தான் பிடிக்கும் இறையை கொல்லவும், செரிமானத்திற்காகவும் தன்னுடைய எச்சில் நஞ்சு வைத்திருக்கிறது.

    *   பாம்பிற்கு காது கேட்காது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செய்லபடும்.

    *   52 வகையான பாம்புகளுக்கு நச்சுத்தன்மை உண்டு.

    *   பாம்பைக் கொண்றால் அதன் உடல் பிளந்து வெளிவரும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்திற்கு வரவைக்கிறது.

    *   சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.

    *   நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின்(Cobrozin) என்ற வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

    *   பாம்பின் தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் - இந்திய அரசின் வன விலங்கு பாதுகாப்புச்   சட்டம் - 1972.

    *  மஞ்சள் சிட்டு எந்த பகுதியில் வாழும் - சமவெளி பகுதியில்.

    *  தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை - 13

    *  சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.

    *  தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் - 30

    *  தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் - 12

    *  தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் - 18

    *  உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன - 216



    இலக்கணம்:

    *   உடனிலை மெய் மயக்கம்:

    தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும் - க், ச், த், ப்.

    (எ.கா)  பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.

    *   வேற்றுநிலை மெய்மயக்கம்:

    தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் - ர், ழ்

    எ.கா: சார்பு, வாழ்க்கை

    *   எழுத்து பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும் எழுத்துக்கள் - ற், ன்.

    எ.கா: குற்றம், மேற்கு -ற், அன்னம், அன்பு - ன்.

    *   உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை.

    *   ஆறுகள் மாசடையக் காரணம் - தொழிற்சாலைக்கழிவு.

    *   மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு.

    *   மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்

    *   வண்மை - கொடைத்தன்மை, வன்மை - கொடுமை.

    No comments: