Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 27, 2013

    மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கு இழுத்தடிப்பு: ஆசிரியர் கூட்டணி நிர்வாகி புகார்

    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிகிச்சை பெற வசதியாக, அவர்களது ஊதியத்தில், மாதம், 150 ரூபாய் வீதம், எட்டு மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
    நாமக்கல் மாவட்டத்தில், அதற்கான அடையாள அட்டை வழங்காததால், அத்திட்டத்தில், ஆசிரியர்கள் பயன்பெற முடியாத சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து, தமிழக ஆசிரியர் கூட்டணி எருமப்பட்டி வட்டாரச் செயலாளர் ராமராசு கூறியதாவது:
    தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்காக, 2012ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், ஆசிரியர்களின் ஊதியத்தில் மாதம், 150 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர்களுக்கு வழக்கப்பட்டது. அதில், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவை குறித்து பூர்த்தி செய்து வழக்கப்பட்டது. எட்டு மாதம் கடந்த நிலையில், அதற்கான அடையாள அட்டை மற்றும் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை.
    எந்தந்த நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், என்ற விவரமும் ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலை உள்ளது.
    இவ்வாறு அவர் கூறினார்.
    இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவியிடம் கேட்ட போது, ""அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.

    2 comments:

    Unknown said...

    அன்பான சகோதர சகோதரிகளி.. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

    என் பெரியதாயார் அவர்கள் நேற்றைய முன் தினம் இருசக்கர வாகணம் இடித்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தர்ப்போது மருத்துவர்கள் அரசு மருத்துவ காப்பீடு திட்ட அடையால அட்டை கேட்கின்றானர் ஆனால் அவரிடம் அட்டை இல்லை மேலும் குடும்ப அடையாள அட்டையும் இல்லை

    அவர் வோட்டர் அய்டி கார்ட், ஆதார் கார்ட் , போஸ்ட் ஆப்பீஸ் அய்டி கார்ட் வைத்துள்ளார். இதைவைத்து காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி என்றே புரியமல் திகைக்கின்றோம். ஆபரேஷன் செய்ய காப்பீட்டுஅட்டை அவசியம். தயவு செய்து விசாரித்து விரைவில் சொல்லவும். என்னுடைய போன் நம்பர் 9551323565.. நன்றி

    ‘ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32).

    Unknown said...

    அன்பான சகோதர சகோதரிகளி.. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

    என் பெரியதாயார் அவர்கள் நேற்றைய முன் தினம் இருசக்கர வாகணம் இடித்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தர்ப்போது மருத்துவர்கள் அரசு மருத்துவ காப்பீடு திட்ட அடையால அட்டை கேட்கின்றானர் ஆனால் அவரிடம் அட்டை இல்லை மேலும் குடும்ப அடையாள அட்டையும் இல்லை

    அவர் வோட்டர் அய்டி கார்ட், ஆதார் கார்ட் , போஸ்ட் ஆப்பீஸ் அய்டி கார்ட் வைத்துள்ளார். இதைவைத்து காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி என்றே புரியமல் திகைக்கின்றோம். ஆபரேஷன் செய்ய காப்பீட்டுஅட்டை அவசியம். தயவு செய்து விசாரித்து விரைவில் சொல்லவும். என்னுடைய போன் நம்பர் 9551323565.. நன்றி

    ‘ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32).