Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம் எப்போது?

    மதுரையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவுப்படி, மாதம்தோறும் நடக்கும் ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம், மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் நடத்தபடாததால் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு மற்றும் உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான குறைதீர்க் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று இக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறை, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உள்ள நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை ஒருமுறை கூட கூட்டம் நடக்கவில்லை.
    இதனால், ஆசிரியர்களின் சேமநல நிதி பெறுதல், சரண்டர், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பிரச்னைகளுக்கு தீர்வு, ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்தல் போன்ற பிரச்னைகளை, உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
    தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முத்துக்குமார், பொருளாளர் தென்னவன், முன்னாள் நிர்வாகி சகாதேவன் கூறுகையில், "மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர், கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தோம். குறைதீர்க் கூட்டம் நடத்தினால், 28 தொடக்க பள்ளி, 152 இடைநிலை, 240 பட்டதாரி, 151 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 900 ஆசிரியர்கள் பயனடைவர்," என்றனர். மாநகராட்சி கல்வி அதிகாரி கூறுகையில், "அடுத்த மாதம் முதல் வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஆசிரியர்கள் குறைதீர்க் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    No comments: