Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 23, 2013

    குடிகார ஆசிரியர் குஜராத்திற்கு இடமாற்றம் - நாளிதழ் செய்தி

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு, மது போதையில் வருவது, மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது என, செயல்பட்ட, கணக்கு ஆசிரியர் பவுல் பாப்பையா, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியாற்றுபவர் கணக்கு ஆசிரியர் பவுல் பாப்பையா. போதையில் பள்ளிக்கு வருவது, முறையாக பாடங்கள் நடத்தாதது என, இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதோடு, கணித தேர்வு விடைத்தாள்களை ஒப்படைக்கவில்லை. இதனால் மறுதேர்வு நடத்தும் சூழல் ஏற்பட்டது.

    இது குறித்து பெற்றோர் பலமுறை, பள்ளி சேர்மன் கோபக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். அவரும், சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கமிஷனரிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதனால் தைரியமடைந்த பவுல் பாப்பையா, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக மீண்டும் புகார் கிளம்பியது.

    இம்மாதம் 12ம் தேதி, ஒரு மாணவியை, பள்ளி முழுவதும் துரத்தினார். பயந்து போன மாணவி, வீட்டுக்கு தப்பிச்சென்று பெற்றோரிடம் புகார் கூறினார். கோபமடைந்த பெற்றோர், 15 ம் தேதி பள்ளி முதல்வரை சந்திக்க வந்தனர். அப்போது பவுல் பாப்பையாவை தாக்கினர். இது குறித்து பள்ளி முதல்வர் முத்துக்குமாரசுவாமி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னை கமிஷனரிடம், தகவல் தெரிவித்தார்.

    முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளி முதல்வருக்கு தகவல் வந்தது. ஒரு குழு அமைத்து விசாரணை அறிக்கை, சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலம் புஜ் பகுதி பள்ளிக்கு, பவுல் பாப்பையா இடமாற்றம் செய்யப்பட்டார்.

    No comments: