Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஊழியர் பற்றாக்குறை: கேள்விக்குறியான கல்வித்தரம்

    ராமநாதபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில், காப்பாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதால், மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
    ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பெற்றோரை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் அரசு உதவியுடன் தங்கி படித்து வருகின்றனர். தற்போது, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். சமூக நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்பகத்தில், காப்பாளர், கணக்கர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்கள், நீண்ட நாட்களாக காலியாக உள்ளது.

    இதனால் மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மாணவிகளை கண்காணிப்பதிலும், காப்பகம் தொடர்பான கடிதப்போக்குவரத்து, ஆவணங்கள், கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவிகளின் எதிர்கால நலன் கருதி காலிப்பணியிடங்களை நிரப்ப, சமூகநலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    No comments: