Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தொடக்க பள்ளி - நாளிதழ் செய்தி

    பொறையூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொறையூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை
    தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகியோர் பணிபுரிகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளியின் முன்னாள் உள்ள விளையாட்டு மைதானத்தில், அப்பகுதி மக்கள் கால்நடைகளை கட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். மைதானப் பகுதியை, கிராம மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    பள்ளியின் பின்புறம் முட்புதர்கள் வளர்ந்து, விஷப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள், விளையாட்டு மைதானத்தில் விளையாடவே அஞ்சுகின்றனர். இரவு பள்ளி கட்டடம், சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. அடிப்படை தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

    இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி எதிரில் விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன. ஆபத்தை உணராமல், அதில் மாணவர்கள் விளையாடுகின்றனர்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை. உதவி ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார். இதுகுறித்து, மேல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: