Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 14, 2013

    குரூப்-2 தேர்வில் வெற்றி: பணி நியமனம் கிடைக்காமல் விதவைகள் அவதி

    குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றும் ஆதரவற்ற விதவைகள், பணி நியமன ஆணை கிடைக்காமல் நான்கு மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்தாண்டு குரூப்-2 தேர்வில், 2,000 பேர் தேர்வு
    செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணி நியமன ஆணை பெற்று, கடந்த அக்டோபர் முதல் வருவாய், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளில் பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்களோடு சேர்த்து, ஆதரவற்ற விதவைகள் ஒதுக்கீட்டில் தேர்வு பெற்றவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துவிட்டனர். இவர்களுக்கு மட்டும், இது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இவர்களோடு தேர்வானவர்கள், பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது.

    விதவைகள் ஒதுக்கீட்டில் தேர்வான 200 பேர், அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் சென்று பணி நியமன ஆணை குறித்து விசாரிக்கின்றனர். அவர்களிடம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, இது குறித்து உத்தரவு ஏதும் வரவில்லை எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர்.

    சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சென்று கேட்டால், கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என கூறுகின்றனர். இதனால், தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகும், எந்த காரணமும் கூறாமல், பணி நியமன ஆணையும் வழங்காமல் தாமதப்படுத்துவதால் தேர்வுபெற்ற விதவைகள், யாரிடம் சென்று முறையிடுவது என்ற மன வேதனையில் உள்ளனர்.

    குருப்-2 தேர்வில், விதவைகள் ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    No comments: