சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளயில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் கொடுக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு பகுதி களிலும் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்படுகின்றன. சத்தியமங்கலத்தில், கோவை சாலையில் உள்ள ரங்கசமுத்திரம் உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 6ம் தேதி முதல், வழங்கப்படுகிறது.
இங்கு, காலை முதலே ஏராளமான பட்டதாரி மாணவ, மாணவியர் விண்ணப்பம் வாங்கிச் செல்கின்றனர். பேப்பர், 1 மற்றும் பேப்பர் 2 என, இரண்டு விதமான விண்ணப்பங்களும் மொத்தம், 600 வரை விற்பனையாகி உள்ளதாக, பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment