Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 4, 2017

    நெடுவாசலில் மட்டுமல்ல... தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே!? - அரசின் கவனத்துக்கு


    ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஹைட்ராலிக் ப்ராக்சரிங், ஈத்தேன், புரபேன்... என நீளும்  அறிவியல் எளிய மக்களின் மொழியில் இல்லை. CH4, C2H6, C3H8 எனத் தொடுக்கப்படும் அறிவியல் தாக்குதல்களுக்கு, விவசாயம், நிலத்தடி நீர், வாழ்வாதாரம் என உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே இதுவரை எதிர்த் தாக்குதல்களாக இருந்திருக்கிறது. குழம்பிக்கொண்டிருக்கும் குட்டையைத் தனி மீனாய் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.
     


    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறோம்" என்ற பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும்,  அதைக் கொண்டு பொருளாதார லாபம் பார்க்க நினைக்கும் அரசாங்கங்களுக்கும் தமிழர்களின் சார்பான சம்மட்டி அடியாக இருக்கிறது. 

    அமெரிக்காவில் எட்டாண்டுக்காலம் பொறியாளராக இருந்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பியவர் பிரேமானந்த் சேதுராஜன். "Lets Make Engineering Simple" என்ற பெயரில் பெரும் அறிவியல் முடிச்சுகளையும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில் வீடியோக்களாக எடுத்து யூட்யூபில் பதிந்து வருகிறார். 



    இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்


    தமிழகமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்... மக்கள் கருத்து என்ன? #VikatanSurvey

    நீங்கள் ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?

    " ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்தது தான் "ஹைட்ரோ கார்பன்". இதில் ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும் சேர்ந்தால் அது மீத்தேன் - CH4. இரண்டு கார்பனும், ஆறு ஹைட்ரஜனும் இணைந்தால் அது ஈத்தேன் - C2H6. இப்படியாக நிறைய ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன.  இன்று உலகின்  46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. அறிவியல் சூழ்ந்த இந்த உலகில் ஹைட்ரோ கார்பனை நாம் எதிர்க்கத் தேவையில்லை. ஆனால், ஹைட்ரோ கார்பனை எடுக்கும் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" முறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்." 

    ஹைட்ரோ கார்பன் வேண்டும். ஆனால் அதை எடுக்கும் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" வேண்டாம் என்றால் எப்படி?

    " இங்குதான் நாம் பின்தங்கிவிடுகிறோம். உணர்ச்சிமயாக இருக்கும் நம் போராட்டத்தை  அறிவியல் பூர்வமாக மாற்ற வேண்டியது இங்குதான். அரசின் நோக்கம் ஹைட்ரோ கார்பனை எடுத்து எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஹைட்ராலிக் ப்ராக்சரிங் அவசியமற்றது. உலகளவில் பல நாடுகளில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கெடுதல் ஏற்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு பதிலாக எளிய முறையில் நம்மிடம் கொட்டிக்கிடக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும். இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும். அந்தப் பொக்கிஷம் 'குப்பை'..."


    குப்பையா?

    " ஆமாம். அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும் குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.. அமெரிக்காவில் "லேண்ட்ஃபில்" (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.

    1 டன் குப்பை = 40கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள். 

    சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை கொட்டப்படுது. இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகள்ல ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது. 

    1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம்  எல்.பி.ஜி. சிலிண்டர்கள். 

    அதுமட்டுமல்லாமல், மொத்தம் மத்திய அரசு 44 இடங்கள்ல "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" கொண்டு வந்து அதன் மூலமா 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை எடுக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு 90லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். அதுகொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக நம்மால் மாற்ற முடியும். "


    ஸ்வீடன், ஜெர்மனி போன்ற சிறிய நாடுகளுக்கு சரி... இந்தியாவில் இது சாத்தியப்படுமா?

    மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் இதை மிகச் சரியாக செயல்படுத்த முடியும். ஸ்வீடன் குப்பைகளை இறக்குமதி செய்கிறது. நம் நாட்டில் அளவுகடந்த குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தக் காலத்திலேயே நம் விவசாயிகள் வீட்டுக்குப் பின்னாடி குப்பைகளையும், சாணங்களையும் கொண்டு இயற்கை எரிவாயுக்களைத் தயாரித்தவர்கள். "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" என்ற அரக்கனை விட்டுவிட்டு, இந்த மாற்றுத் திட்டத்தைக் கொண்டு போய்ப் பாருங்கள் விவசாயிகள் இதை எப்படி வரவேற்கிறார்கள் என்று..."

    ஹைட்ராலிக் ப்ராக்சரிங்கை விட இந்தத் தொழில்நுட்பம் அதிக செலவு பிடிக்குமோ?

    " கட்டுமான செலவுகளை ஒப்பிடும்போது சிறியளவிலான வேறுபாடு இருக்கும்தான். ஆனால், அதையும் தாண்டி இயற்கை உரங்கள் தயாரிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் வரும் உபரி வருமானம் அதை ஈடுசெய்துவிடும். எல்லாவற்றுக்கும் மேல் இந்தத் திட்டத்தின் மூலம் பூமி வெப்பமயமாதலையும் குறைக்க முடியும்" என்று நிதானமாகச் சொல்லிமுடிக்கிறார் பிரேம். 

    "என்னவென்றே புரிந்துகொள்ளாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நீங்கள் என்ன விஞ்ஞானிகளா?" என்று கேள்வி கேட்ட அரசியல்வாதிகளுக்கான பதில் பிரேமிடம் இருக்கிறது

    No comments: