Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 13, 2017

    தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60 ஆகிறது!? ஏற்பாடு தடபுடல்!

    தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு  பெறும் வயதை 60 ஆக்கப் போராடுகிறாராம் ஒரு அரசு உயர் அதிகாரி. தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொண்டார்கள்!



    சூரியனின் பெயரை முதலாவதாகக் கொண்ட  அந்த பினான்ஷியல் அடிஷனல் செக்ரடரி… பினான்ஷியல் செக்ரட்ரி சண்முகத்துக்கு ஹை ப்ரஷர் கொடுத்து லெட்டர் போட்டுக்கிறாராம்.

    இந்த மாதத்தில் ஐயா ரிட்டயர்ட் ஆவப் போறாராம்… அதுக்குள் முடிச்சிடணும்னு ஏற்பாடு! அதுவும் இந்த பட்ஜெட் செஷனில், இப்போதே அறிவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்… இன்னும் நாலைந்து நாளுக்குள் பட்ஜெட் தயாரிப்பில் இதைத்  திணிக்க ஏற்பாடு  நடந்து கொண்டிருக்கிறது… அனேகமாக இந்த பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம்….

    இந்த வருடம் பணி ஓய்வு பெறும் ஒவ்வொருவருக்கும் பணிஓய்வுக் கொடை, இதர பண பலன்கள் என சுமார் 40 லகரத்துக்கு மேல் கொடுக்கவேண்டியிருக்கும் என்று கணக்கெல்லாம் காட்டி…

    இப்போதைய நிலையில் அரசு கஜானா நிலை சரியாக இல்லை என்று சாக்கு சொல்லி…

    இந்த பணி ஓய்வு வயதை 60ஆக மாற்ற அரசுக்கு பினான்ஷியல் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதாம்…

    இதனால் பாதிக்கப்படப் போவது, வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள்,

    ஏற்கெனவே வேலை பார்க்கும் நடுத்தர வயது நபர்கள்… எல்லாம்தான்!

    பார்ப்போம்… என்ன நடக்கிறது என்று!

    எல்லாம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம்!

    – தினசரியின் கருடார்

    No comments: