Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 6, 2017

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு?

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.


    அதன்படி, ''இந்த ஆண்டு ஜனவரி, 1 முதல், 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர், கே.கே.என்.குட்டி தெரிவித்துள்ளார்.

    எதிர்பார்ப்பு:

    நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டில், 4.95 சதவீதம் அளவுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும். ஆனால், தசம எண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

    மேலும், 2016 ஜூலை, 1 முதல் அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், தற்போது, 2 சதவீதம் அளவுக்கே உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 4 சதவீதம் வரை வழங்கப்பட வேண்டும் என, ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    No comments: