Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 2, 2017

    பொதுத்தேர்வு கவுன்சிலிங் 18,670 மாணவர்கள் பங்கேற்பு

    கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், 18 ஆயிரத்து 670 பேருக்கு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் மூலம், கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


    தமிழகம் முழுவதும், பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இன்று (மார்ச் 2ம் தேதி) துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதியுடன், தேர்வுகள் நிறைவடைகின்றன.

    கோவை மாவட்டத்தில், 346 பள்ளிகளில் இருந்து, 38 ஆயிரத்து 218 பேர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வை 519 பள்ளிகளில் இருந்து, 42 ஆயிரத்து 506 மாணவர்கள் எழுத உள்ளனர். 

    இவர்கள், பயம், பதற்றம், தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, சிறப்பாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், கடந்த இரு மாதங்களாக, தேர்வு நேர கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வந்தது. இதில், 97 பள்ளிகளில் இருந்து, 18 ஆயிரத்து 670 மாணவர்கள், ஆலோசனை பெற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாவட்ட நடமாடும் உளவியல் மைய நிபுணர் அருள்வடிவு கூறுகையில், ”பொதுத்தேர்வு எதிர் கொள்ளும் மாணவர்களுக்கு, மதிப் பெண் பெறுவதன் முக்கியத்துவம், கவன சிதறல்களை தவிர்த்தல், மன அழுத்தத்தில் இருந்து விடுபட, பொது கவுன்சிலிங் அளிப்பது வழக்கம். 

    இதன்படி, மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் வழிகாட்டுதலோடு, அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளோம்,” என்றார்.

    No comments: