லேட்ரல் என்ட்ரி காலியிடங்களுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் இன்று 6ம்தேதி நடக்கிறது. பி.டெக்., லேட்ரல் என்ட்ரி கவுன்சிலிங்கில் 554 காலியிடங்கள் உள்ளன.
இந்த காலியிடங்களுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் இன்று 6ம் தேதி துவங்குகிறது.
காலை 9 மணிக்கு மெக்கானிக்கல் இன்ஜியரிங், 10 மணிக்கு சிவில், 11 மணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், 12 மணிக்கு ஐ.டி., 2 மணிக்கு இ அண்ட் ஐ., 2.15 மணிக்கு ஐ.சி.,2:30 மணிக்கு கெமிக்கல், 2:45 மணிக்கு இ.சி.இ., 3:15 மணிக்கு இ.இ.இ., இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தை www.centaconline.in என்ற இணையதளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். கவுன்சிலிங்கில் முதல் முறையாக கலந்து கொள்ளும் மாணவர்கள் 850 ரூபாய் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுத்து வர வேண்டும்.
எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினர் 350 ரூபாய்க்கு டி.டி.,எடுத்தால் போதுமானது.ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்று சீட் எடுத்த மாணவர்கள் 750 ரூபாய்க்கும், எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினர் 300 ரூபாய்க்கும் டி.டி.,எடுத்து கலந்து கொள்ளலாம்.
இந்த பணம் திருப்பி தரப்படமாட்டாது என, சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.அழைப்பு கடிதம் கிடைக்காவிட்டாலும் தரவரிசை பட்டியலில் பெயர் இருப்பின், கவுன்சிலிங் நடக்கும் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment