Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 25, 2015

    பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களின் பணி நிரவல்களை ரத்து செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:


    மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

    உபரி ஆசிரியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் அனைவரும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை போதிய பாடவேளையுடன் கடுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி காட்டியவர்கள். உபரி என்றால் பாடவேளை ஏதும் ஒதுக்கப்படாமல் வெறுமனே இருந்திருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலை எந்த ஆசிரியர்களுக்கும் ஏற்படவில்லை. பள்ளிகளில் கடுமையான பணிச்சுமையுடன் தான் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 37 ஆயிரம் மாணவ-மாணவிகள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். எனவே ஆசிரியர்கள் உபரியாக இருக்க காரணம் இல்லை.

    பணி நிரவலை ரத்து செய்ய வேண்டும்

    உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்ததில் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்திற்கும் முரண்பாடுகளும், குளறுபடிகளும் உள்ளன. உதாரணமாக ஒரு பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இல்லை என்று முதன்மை கல்வி அலுவலகம் தெரிவிக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகம் அந்த பள்ளியில் 5 உபரி ஆசிரியர்கள் உள்ளனர் என்கிறது. எனவே இவற்றை முறைப்படுத்தி சரி செய்யாமல் ஆசிரியர்களை பணி நிரவல் என்ற பெயரில் இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.

    ஒருவேளை அப்படி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அவர்களை மே மாத இறுதியில் செய்ய வேண்டும். எனவே நாளை (புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடத்தப்படும் பணி நிரவல்களை ரத்து செய்து உபரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு மாயவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    No comments: