Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 6, 2015

    10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கையேடு விநியோகம் தாமதம்

    அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கப்படும் அறிவியல் ஆய்வக கையேடு நடப்பு கல்வி ஆண்டில் வழங்குவது தாமதமாகியுள்ளது.


    கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் புத்தகத்தின் அடிப்படையில், அவர்கள் நடத்தும் பாடங்களுக்கு மட்டும் ஆய்வக பயிற்சி நடந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் ஆய்வகத்திற்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தனி பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டது.

    அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக வழங்கப்படும் அறிவியல் ஆய்வக கையேட்டில் ஆய்வக வசதிகள், ஆய்வங்களை பயன்படுத்தும் விதம், செய்முறை பயிற்சி குறித்தும், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. 

    இக்கையேடு நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை வழங்கப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து இடைநிலை கல்வி திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆய்வகம் குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை, மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வசதியாக சில ஆண்டுகளாக அறிவியல் ஆய்வக கையேடு வழங்கப்பட்டது. 

    பாடங்களில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தும் இக்கையேட்டை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    No comments: