சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி, தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும், இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் பிரதீப் குமார் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய அரசின் அனைத்து அமைச்சகச் செயலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி, தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தேசிய விழாவான, சுதந்திர தின விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும், விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
பல சமயங்களில், சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் அரசு அதிகாரிகளில் பெரும்பாலோர், விழாவில் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது. இந்த முறை, விழாவில் பங்கேற்காத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment