Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 6, 2015

    'ஜென்டர் சாம்பியன்' திட்டம் மத்திய அரசு உத்தரவு

    பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான வழிமுறைகளை, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. இந்தியாவில், 15 - 24 வயதுக்கு உட்பட்டு, 24 கோடி பேர் இருக்கின்றனர்.
    இது, மக்கள் தொகையில், 20 சதவீதம். இந்த இளம் தலைமுறையினரை கல்வி கற்கும் போதே, ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில், பாலின வேறுபாடு பிரச்னையைக் களைய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, 'ஜென்டர் சாம்பியன்' என்ற பெயரில், மாணவ, மாணவியரிடையே குழு தலைவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, குழுத் தலைவராக நியமிக்கப்படுவர் .இவர்களுக்கு, தனியாக அடையாள அட்டை, பெயர், 'பேட்ஜ்' போன்றவை வழங்கப்படும். நன்றாக பேச, எழுத மற்றும் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசும் வகையிலானவர்களையே, இந்த சாம்பியன் பொறுப்புக்கு தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களின் மூலம், பாலின பிரச்னை இல்லாமல், மாணவ, மாணவியர் வேறுபாடு பார்க்காமல், சமூக, கல்வி நல திட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 'ஜென்டர் சாம்பியன்' பொறுப்புக்கு வருபவருக்கு பயிற்சி அளிக்க தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட், 31ம் தேதிக்குள் பெற்று, 'ஜென்டர் சாம்பியனை' நியமிக்க வேண்டும் என, யு.ஜி.சி.,யிலிருந்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

    No comments: