கிராம பஞ்சாயத்து திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் வகையில், கல்லுாரி மாணவர்களை பஞ்சாயத்து கூட்டங்களில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
இ-பஞ்சாயத்து அனைத்து தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன் விவரம்:
கிராமப் பஞ்சாயத்து நடவடிக்கைகளை, இணையதள சேவைக்குள் கொண்டு வர, இ-பஞ்சாயத்து திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்
படுத்தியுள்ளது. இதன்படி, 10 வகை, திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புவி அமைப்பியல் தகவல் சேவை என்ற, ஜி.ஐ.எஸ்., தளத்தில், கிராம பஞ்சாயத்து தகவல்கள் சேர்க்கப்படுகின்றன.அனைத்து கிராம பஞ்சாயத்துகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, இணையதளம் வழியே திட்டங்களின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியில் அந்த திட்டங்களின் தரம் உயர்த்தப்படும்.
கிராம பஞ்சாயத்துகளில் கல்வி வளர்ச்சிக்கான புதிய திட்டங்களைக் கொண்டு வர, அதில், கல்லுாரி மாணவர் மற்றும் பேராசிரியரை ஈடுபடுத்த வேண்டும்.
வளர்ச்சி திட்டங்கள்இதற்காக, கிராம பஞ்சாயத்து கூட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். மேலும், மாணவர்களின் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்கான கருத்துகள் மற்றும் விவாதங்களை, பஞ்சாயத்து திட்டங்களில் கொண்டு வர வேண்டும்.
இந்த திட்டங்களுக்காக, அனைத்து கல்லுாரிகளும், புவி அமைப்பியல் மற்றும் அதைச்சார்ந்த துறை மாணவர் மற்றும் பேராசிரியரை, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அனுப்பி, அவர்களை வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்க செய்ய வேண்டும். இதுகுறித்து, யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment