மணலி புதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுமானம் துவங்கியுள்ளது.
மணலி புதுநகரில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 357 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் இன்றி மாணவர்கள் பரிதவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 8.6 லட்சம் ரூபாய் செலவில், அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது. அடுத்த மாதஇறுதிக் குள் கட்டுமான பணி நிறைவு பெறும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment