Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 31, 2015

    10ம் வகுப்பு கணிதத் தேர்வு எளிது: அதிகம் பேர் 'சென்டம்' வாங்கலாம்!

    நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிமையாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். வீ.பவித்ரா (கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.): ஒரு மார்க்,2 மார்க் வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் உள்ள கேள்விகளில் இருந்தே கேட்கப்பட்டதால் மிக எளிதாக இருந்தது. கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்தது. பல தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இந்த தேர்விலும் வந்திருந்தது.
    சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட 80 மார்க் பெறலாம். நன்கு படிக்கும் மாணவர்கள் 'சென்டம்' எளிதாக பெறலாம். அனைத்து வினாக்களும் எதிர்பார்த்தது போல் இருந்ததால் உரிய நேரத்திற்கு முன்பே தேர்வு எழுதி முடித்து விட்டேன்.
    எஸ்.ஏ.அபிநயவேம்பா(தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஒரு மார்க், 5 மார்க் கேள்விகள் மிக எளிமையாக இருந்தது. கட்டாய கேள்வியில் கேட்கப்பட்ட 2 வினாக்களும் எளிதாக இருந்தது. 5 மார்க்கில் 34வது வினாவில் புத்தகத்தில் உள்ள கேள்வியை நம்பரை மட்டும் மாற்றி கேட்டு இருந்தது மிக எளிமையாக இருந்தது.10 மார்க் 'சாமண்டரி' கணக்கில் முக்கோணத்தின் குத்துக்கோடு, தொடுகோடு என இரண்டு கேள்விகளும் எளிமையாக இருந்தது. கிராப்ட் கணக்கில் 'டைரக்ட் வேரியேஷன்' கேட்கப்பட்டது எளிமையாக இருந்ததால் கணக்கில் 100க்கு 100 எளிதாக பெறலாம்.
    ஆர்.வெங்கடேஷ்வரன்(தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஒரு மார்க், 5 மார்க் கேள்விகள் வகுப்பறையில் அடிக்கடி செய்து பார்த்த கேள்விகளே வந்தது. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் பலவும் தேர்வில் வந்தது. புத்தகத்தில் உள்ள மாதிரி வினாக்கள் போலவே தேர்விலும் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மாதிரி வினாக்கள் வகுப்பில் அடிக்கடி எழுதி பார்த்ததால் தேர்வில் எளிமையாக இருந்தது. கட்டாய கேள்விகளிலும் குழப்பம் இன்றி இருந்ததால் சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட 70 மார்க் பெற முடியும். அதிகமானோர் சென்டம் எடுக்க வாய்ப்பு ஏற்படும்.
    தென்கரை முத்துப்பிள்ளை, தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, வேடர்புளியங்குளம், மதுரை: ஒரு மதிப்பெண் பகுதி 15 வினாக்களும் 'புக்பேக்'கில் இடம் பெற்றவை. எளிதாக இருந்தன. 2 மதிப்பெண் பகுதியில்30வது வினா மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் 45வது வினாக்கள் கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானதாக இருக்கும். ஐந்து மதிப்பெண் பகுதியில் 38வது வினா கட்டாய வினா. புத்தகத்தில் இடம்பெறாத 'சாய்சதுரம்' பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்பார்த்த பிதாகரஸ், இருசம வெட்டி தேற்றங்கள் இடம்பெறவில்லை. சராசரி மாணவர்களும் 80 மதிப்பெண் எளிதில் பெறலாம்.

    No comments: