Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 30, 2015

    மாணவர்களுக்காக மெனக்கெடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

    அரசுப் பள்ளிதானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத்தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர்.


    மதுரை அருகே மேலுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயலைப் பார்த்து ஆசிரியர் சமூகம் காலரை துாக்கிவிட்டு பெருமைப்படலாம்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால் மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நூறு சதவீதம் தேர்ச்சி பெறச்செய்ய தலைமை ஆசிரியர் துரைப்பாண்டி முயற்சிகள் எடுத்து வருகிறார். கணித ஆசிரியர் சண்முகப்பிரியா, ஜோனாமேரி ஆகியோர் இதற்கு பக்கபலமாய் உள்ளனர்.

    இவர்கள் ஆரம்பம் முதலே விடுமுறை நாட்களில் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர்; மாணவர்கள் பசியுடன் வந்தால் பாடம் மனதில் நிற்குமா? தாய்மை உள்ளத்துடன், சொந்த செலவில் மதிய உணவும் வழங்குகின்றனர் ஆசிரியைகள்.

    இதுகுறித்து சண்முகப்பிரியா கூறியதாவது: மாணவர்களுக்கு காம்பஸ், பாகை மாணி, ஸ்கேல், பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக கொடுத்து கற்பிக்கிறோம்.

    விடுமுறை நாட்களில் பள்ளியில் இலவச மதிய உணவு கிடையாது; ஆசிரியைகளின் செலவில் உணவு கொடுக்கிறோம். மேலும் கேள்வித்தாள் (மெட்டீரியல்) நகல் கொடுத்து கற்பிக்கிறோம் என்றார்.

    ஜோனாமேரி கூறியதாவது: விடுமுறையில் மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருந்து விடுவர்; அவரவர் வீட்டிற்கு போனில் அழைத்து, சிறப்பு வகுப்பு எடுக்கிறோம். தவறாது கலந்து கொள்வோருக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறோம், என்றார்.

    மாணவர்கள் கூறியதாவது...

    பிரபாகரன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்ததால், அதில் கவனம் போய்விடும் என பயந்தேன். இதனால் வீட்டில் இருப்பதை விட பள்ளிக்கு வருவது உபயோகமாக இருந்தது.

    ராஜ்குமார்: வீட்டில் இருந்தால் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவோம். பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்துவது, படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது. இவ்வாறு கூறினர்.

    No comments: