Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 31, 2015

    பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

    "பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே கடைசி வாரத்திலும் வெளியாகும்,” என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

    அரக்கோணத்தில் அவர் கூறியதாவது:
    தமிழகம் முழுவதும், 155 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 208 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி செய்யப்படும். ஏப்ரல் முதல் வாரத்திலேயே, 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும். ஜூனில், 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: