Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 23, 2015

    குரூப் - 2 பணியிட நியமனத்திற்கு விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பம்

    டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 பதவிகளான நகராட்சி ஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறை நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1064 பணியிடங்களுக்கு 2014 நவம்பரில் தேர்வு நடந்தது.


    இதன் முடிவுகள் மார்ச் 9ல் வெளியானது. இதற்கு முன் தேர்வில் பெற்றவர்களில் 1:2 விகிதாசாரத்தில் தேர்வுசெய்து சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

    தற்போது தேர்வாணையம் 1:5 விகிதாசாரத்தில் தேர்வானவர்களை அழைத்துள்ளது. இதில் யாருக்கு பணி நியமனம் கிடைக்கும், எவ்வாறு தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    பழநி ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், "குரூப்-2 வில் 1064 காலி பணி இடங்களுக்கு 5,565 பேருக்கு இம் மாத கடைசியில் சான்றிதழ் சரிபார்த்தல் பணி துவங்க உள்ளது.

    இது மட்டும் 2 முதல் 3 மாதம் நடைபெறும். அதன்பின் நேர்முகத்தேர்வு நடைபெறும். இரண்டு முறை சென்னை செல்வதால் மாணவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

    1:5 விகிதாசாரத்தில் அழைக்கப்படுபவர்களில் யாருக்கு பணி நியமனம் கிடைக்கும் என்பதில் தேர்வானவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது" என்றார்.

    No comments: