மதுரையில் பல்கலைகளின் தொலைநிலைத் தேர்வுகள் பள்ளி நாட்களில் நடத்தப்படுவதால், வழக்கமான வகுப்புகள் நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை காமராஜ், சிதம்பரம் அண்ணாமலை, காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் உட்பட பல்கலைகளின் தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் பருவமுறை தேர்வுகள் ஏப்.,/மே மற்றும் அக்., மாதங்களிலும், அல்பருவமுறை தேர்வுகள் ஜூன் மற்றும் டிச., மாதங்களிலும் நடக்கின்றன.
இதற்கு பெரும்பாலும் மதுரை நகர் பள்ளிகளில்தான் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளாக சனி, ஞாயிறு தவிர்த்து பள்ளி நாட்களிலும் இத்தேர்வுகள் தற்போது நடத்தப்படுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சில வகுப்பறைகள் தேர்வுக்காக ஒதுக்கப்படுவதால் மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றன.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், "இது பள்ளி கல்விக்கு சம்பந்தம் இல்லாத தேர்வுகள். இவற்றை விடுமுறை நாட்களில் மட்டும்தான் நடத்த வேண்டும். சில பள்ளிகளில் பல்கலை வழங்கும் பணத்திற்காக வேலை நாட்களிலும் தேர்வு மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகின்றன. இத்தேர்வுகளை கல்லுாரிகளிலும் நடத்த வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment