Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 24, 2015

    வாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் இயங்கும் அரசு பள்ளி

    ராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம், நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர் பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும், டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.


    அடிப்படை வசதியின்றி, சாலை ஓரம் உள்ள ரேஷன் கடையில் செயல்படும் இப்பள்ளியில் 4 மாணவிகள், 8 மாணவர்கள் படிக்கின்றனர்.

    அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர் ஒருவர் கூறுகையில், "நொச்சிவயல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி வயது குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்க 3 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரம் வந்து சென்றனர். அவர்களின் நலன் கருதி நடப்பு கல்வி ஆண்டில் இப்பள்ளி துவங்கப்பட்டது.

    இந்த மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது. ரூ.15 லட்சத்தில் கழிப்பறை, சமையல் கூடம் உட்பட இரு வகுப்பறைகளுடன் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டடத்தில் பள்ளி செயல்படும்" என்றார்.

    No comments: