Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 24, 2015

    ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம்

    இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, 251 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 23 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில், 7 ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக , பள்ளியின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகின்றது.


    இதனை கண்டித்து, நேற்று பெற்றோர், மாணவர்களுடன் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நுழைவு வாயிலில் அமர்ந்து, பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பெற்றோர்களை, பள்ளி துணை ஆய்வாளர் செல்வலட்சுமி, தலைமையாசிரியை திலகவதி சமாதானப்படுத்தினர்.

    பெற்றோர் கூறும்போது, "சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதால், தனியார் பள்ளிகளை தவிர்த்துவிட்டு அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்ந்துள்ளோம். கோரிமேடு இந்திரா நகர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து, பெற்றோர், மாணவர்களுடன் நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர்.

    ஆனால், போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித்துறை அலட்சியமாக உள்ளது. இதனை கண்டித்து விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

    No comments: