சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் காலியாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டார். அப்போது அவரிடம் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். அனேகமாக, டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிப்போடு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதியும் வெளியாகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது அல்லது 3 வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்தவாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலுடன் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று கூறப்படுவதால் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதியும் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
1 comment:
COMPUTER TEACHERS SALARY EXTN. ORDER
Post a Comment