Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 8, 2015

    டி.ஆர்.பி., தேர்வு பணிகள் புறக்கணிப்பு; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு

    தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.


    மாநிலத்தில் 1307 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை 400 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு பணிகள் ஒதுக்கீடு செய்வதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் ஏற்பட்ட ’ஈகோ’ கல்வித் துறையை கலங்க வைத்துள்ளது.

    உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. துறை அலுவலர் மற்றம் கூடுதல் துறை அலுவலர் பொறுப்பை நிர்வாக பொறுப்பிலுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. அதிகாரிகள் பேசி அப்போதைக்கு பிரச்னையை முடிக்கின்றனர். இதில் கல்வித்துறை உரிய வழிகாட்ட வேண்டும். திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களின் தவறான அணுகுமுறையால் தேர்வுப் பணி நியமனத்தில் சில மாற்றங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

    பள்ளி கல்வியின் முக்கிய அங்கமான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவுரவத்தை காக்கும் வகையில் பணிகள் வழங்காவிட்டால் இனிவரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் புறக்கணிப்போம், என்றார்.

    மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது:

    பள்ளிக் கல்வி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மை மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் பணி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், துறை அலுவலர்கள் பொறுப்பு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர்களுக்கும், அறை கண்காணிப்பாளர் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படும்.

    இம்முறை துறை அலுவலர் பணியை உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கி அதற்கு கீழ் உள்ள அறை கண்காணிப்பாளர் பணியை முதுநிலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கியுள்ளனர். உரிய ’கேடர்’படி பணிகள் ஒதுக்காததால் டி.ஆர்.பி., தேர்வுப் பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.

    No comments: