Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 3, 2015

    தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் வளர்க்கும் பயற்சி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ராமசந்திரன் முன்னிலை வகித்தார். மாணவர் ரோஹித்குமார் வரவேற்றார். ஈரோடு ரயில்வே பயற்சி பள்ளி ஆசிரியர் துரைப்பாண்டியன் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயற்சி அளித்தார்.
    வார்த்தை அமைப்பு,கணித முறை,நுண்ணறிவுத்திறன் ஆகியன பற்றியும்,கேள்விகள் அமைப்பு,பதில் அளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளித்தார்.ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பதில் அளித்தனர்.பயற்சி ஆசிரியரும் மாணவர்களின் தன்னார்வத்தை பாராட்டி கூடுதல் பயற்சி அளித்தார்.

    இப்பயற்சியை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் சக ஆசிரிய,ஆசிரியைகளுக்கும் ,  விளக்கம் அளித்து பேசினார்.  இந்த தேர்வு குறித்தும் ,இதனில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும்,தேர்வு முடியும் வரை பெற்றோர்கள் எவ்வாறு மாணவர்களை ஊக்கபடுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதனில் வெற்றி பெற்றால் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ .500 அரசால் வழங்கப்படுகிறது.இதை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.புவனேஸ்வரி,மீனாள் ,சேதுக்கரசி ,அங்கையற்கண்ணி ,சொர்ணாம்மாள் உட்பட பல பெற்றோர்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.மாணவி நந்தினி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள்  முத்து மீனாள் ,ஸ்ரீதர் ,செல்வ மீனாள் செய்திருந்தனர்.

    No comments: