Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 23, 2015

    தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி


    தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் செ.முத்துசாமி கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொடக்கக்கல்வி
    அலுவலகம் மூலம் ஊதியம்
    பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
    ஒவ்வோர் மாதமும்
    ஒவ்வொரு அலுவலகத்திலும் 400 முதல் 600
    வரையிலான எண்ணிக்கைஉள்ள
    ஆசிரியர்களுக்கு ஊதியம்
    பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள்
    அனைவருக்கும் பிப்ரவரி மாதமே புதிய “இ
    பேரோல்” முறையிலேயே பட்டியல்
    தயாரித்து வழங்கப்படவேண்டும் என்ற
    கண்டிப்பான அறிவுறை கருவூல
    அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக
    அறிகிறோம்,
    அதிக எண்ணிக்கையில் உள்ள
    ஆசிரியகளுக்கு ஊதியபட்டியலை ஒரே
    மாதத்தில்,அதுவும்
    வருமான்வரி,தொழில்வரி கணக்கிடப்படும்
    பிப்ரவரி மாதத்திலேயே புதிய “இ பேரோல்”
    செய்ய வேண்டும் என்று கருவூல
    அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால்
    ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் ஊதியம்
    பெறுவது பாதிக்கப்படும் ,எனவே
    இம்முறையை அமுல் படுத்த கால அவகாசம்
    கோரவேண்டும் என்று இயக்குனர் அவர்களின்
    கவனத்திற்கு கொண்டுசெல்ல
    முயன்றபோது அவரின் சார்பாக
    இணைஇயக்குனர்
    திருமதி லதா அவர்கள்,இயக்குனர்
    விடுப்பு முடித்து திரும்பிய உடன்
    இது குறித்து மாநில கருவூல
    அலுவலருடன் கலந்தாலோசனை செய்து கால
    அவகாசம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    எனதெரிவித்தார்.

    No comments: