Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 13, 2015

    கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : ஜி.கே. வாசன் கோரிக்கை

    கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


    தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தர ஊதியம் ரூபாய் 4,200 வழங்க வேண்டியும், பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு, பதவி உயர்வு, பள்ளிகளின் தரம் உயர்த்துதல், காலியான பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆசிரியர் கூட்டணி போராடி வருகிறது.

    தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு, மத்திய அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசை அணுகி, அதன்பின் உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்கள். உயர் நீதிமன்றம் "மனுதாரர்களின் - ஆசிரியர்களின் - கோரிக்கையை பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் தக்க பதில் தர வேண்டும்" - என்று தமிழக அரசை அறிவுறுத்தியது.

    அதனை பரிசீலித்த தமிழக அரசு நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் ஊதியத்திற்கு இணையாக, கிராமங்களில் பணிபுரியும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாது; காரணம் கிராமங்களில் செலவு குறைவு, இரண்டாவது இக்கோரிக்கையை ஏற்றால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதனை ஏற்கும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை இல்லை" - என்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில், ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

    No comments: