Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 13, 2015

    ஆம்பூர் அருகே தொடக்க கல்வி அதிகாரியை போதையில் தாக்க முயற்சி

    மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை, குடிபோதையில் தாக்க முயன்றதாக கூறப்படும் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகேயுள்ள அகரம்சேரியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நவசீலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வீடு கட்டுவதற்காக 15 லட்சம் கடன்கேட்டு நவசீலன் விண்ணப்பித்துள்ளார்.
    இதில் முதல் தவணையாக 7.5 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர் 2வது தவணை கேட்டு நவசீலன் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை அணுகியுள் ளார். இதைதொடர்ந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாசலம், நவசீலன் வீடு கட்டுவது குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பிட்ட விதிப்படி நவசீலன் வீடு ஏதும் கட்டப்படவில்லை என்பதால் 2வது தவணை வழங்க முடியாது என அலுவலர் வெங்கடாசலம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவசீலன் குடிபோதையில் மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாசலத்திடம் வாக்குவாதம் செய்ததோடு அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரங்க நாதன் தலைமை ஆசிரியர் நவசீலனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்

    No comments: