Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 5, 2015

    ரூ.6,000 கோடி கடன் சுமையை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு?

    ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு; ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 4,000 கோடி ரூபாய்; போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு, 1,465 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகை என, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் போக்குவரத்து கழகங்கள் தவிக்கின்றன.கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் என்ன வழியை பின்பற்றுவது என்பது தெரியாமல், அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    இதனால், ஒரு கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி கி.மீ., தூரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கி.மீ.,க்கு, நான்கு ரூபாய் இழப்பு என்ற கணக்கின்படி, நாள்தோறும், நான்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்ற வகையில், ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையையும் கழகங்களுக்கு அரசு முழுமையாக தருவதில்லை. இப்படி வருவாய் இழப்பில் சிக்கித் தவிக்கும் போக்குவரத்து கழகங்கள், இழப்பை சமாளிக்க ஊழியர்கள் தர வேண்டிய தொகையை கொண்டு பஸ்களை இயக்கி வருகின்றனர். ஓய்வு பெற்றோருக்கும் பணிக்கொடை தொகை பாக்கி உள்ளது, இப்படி, 'ஊழியர்களுக்கு சேர வேண்டிய, 4,000 கோடி ரூபாய் வரை, போக்குவரத்து கழகங்களின் நிர்வாகத்தினர், பிற விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்' என்பதை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொதுச் செயலர் ஆறுமுக நயினார் உறுதிப்படுத்தினார். மேலும், போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்து வரும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு, கடந்தாண்டு மார்ச் வரை, 1,465 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகை இருப்பதாக, கொள்கை விளக்க குறிப்பில் வெளியிட்டுள்ளனர்.
    ரூ.6,000 கோடி நிதியுதவி கிடைக்குமா?
    ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கும் போது, மற்ற அரசு துறைகளில் ஊழியர்களுக்கு உடனடியாக கிடைத்து விடும். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்களால், அகவிலைப்படியை உடனடியாக வழங்க இயலவில்லை. சமீபத்தில் அறிவித்த, 7 சதவீத அகவிலைப்படி, ஆறு மாதங்களுக்கு வழங்கியாக வேண்டும். மொத்தத்தில், 6,000 கோடி ரூபாய்க்கு மேல் கழகங்களுக்கு கடன் உள்ளது. சமீபத்தில், டீசல் விலை குறைப்பால், கூடுதல் கடனுக்கு சிக்காமல் தப்பி உள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.
    இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்குவதற்கு முன், நிதி நிலைமையை பேச்சுவார்த்தை குழு ஆராயும். அப்போது, கழகங்களின் கடன் சுமை அனைத்தும் தெரியவரும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வு உட்பட சலுகைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அதே நேரத்தில், கழகங்களுக்கு, 6,000 கோடி ரூபாய் வரை நிதியுதவி அரசு வழங்குவதும் சாத்தியமில்லை. அரசுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: