Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 5, 2015

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி.6ந்தேதி(செவ்வாய்க்கிழமை)யும். 8 ந்தேதி (வியாழக்கிழமை)யும் நடைபெற .இருக்கிறது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தகவல்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வருகிற 6ந்தேதி(செவ்வாய்கிழமை) மற்றும் 8ந்தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் நடைபெற இருக்கிறது. என்று அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வருகிற 6ந்தேதி(செவ்வாய்கிழமை) மற்றும் 8ந்தேதி(வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் நடைபெறுகிறது. அந்த முறையில் குன்றாண்டார்கோவில் ஒன்றிய பள்ளிகளுக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அன்னவாசல் ஒன்றிய பள்ளிகளுக்கு அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், விராலிமலை ஒன்றிய பள்ளிகளுக்கு விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை ஒன்றிய பள்ளிகளுக்கு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருமயம் ஒன்றிய பள்ளிகளுக்கு திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பொன்னமராவதி ஒன்றிய பள்ளிகளுக்கு பொன்புதுப்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், அரிமளம் ஒன்றிய பள்ளிகளுக்கு அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கந்தர்வக்கோட்டை ஒன்றிய பள்ளிகளுக்கு கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருவரங்குளம் ஒன்றிய பள்ளிகளுக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி ஒன்றிய பள்ளிகளுக்கு அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கறம்பக்குடி ஒன்றிய பள்ளிகளுக்கு கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆவுடையார்கோவில் ஒன்றிய பள்ளிகளுக்கு ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மணமேல்குடி ஒன்றிய பள்ளிகளுக்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெற இருக்கிறது. 202 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழுக்களைச் சேர்ந்த 625 உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெறும்.பயிற்சியினை தலைமைப்பண்பு பயிற்சி பெற்ற 39 தலைமையாசிரியர்கள் கருத்தாளர்களாக இருந்து நடத்துகிறார்கள்.இப்பயிற்சியினை மாநில அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் முதன்மைக்கல்வி அலுவலராகிய என்னுடைய வழிகாட்டுதலின்படி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரசன்னாதேவி, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு ச.பன்னீர்செல்வம், திரு கா.பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    No comments: