SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை 10.09.2014, 13.10.2014 மற்றும் 13.11.2014 என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சந்தித்து வென்ற கோரிக்கைகள் பள்ளி கல்வி துறை போல் தொடக்க கல்வி துறையில் ,தமிழகம் முழுவதும் ஓரே மாதிரி வேலைநாள்கள் (பிப்ரவரி ,மார்ச்,மே மாதம் வலியுறுத்தி ) SSTA ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து SSTA வென்ற கோரிக்கைகள்.
1) குறுவள மைய நாட்களுக்கு ஈடாக சிறப்பு தற்செயல் விடுப்பு வெளியிட வலியுறுத்தி அதற்கான பள்ளி கல்வி துறையில் வெளியிட்ட அரசாணையை இயக்குனர் அவர்களிடம் சேகரித்து கொடுத்து,தொடக்க கல்வி துறையிலும் அவ்வாறான அரசாணை விரைவில் வெளியிட ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
2) ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் .(விடுபட்ட பதிவுகளை ) 3) CPS ஒப்புகை சீட்டு 2003 க்கு பின் பணியில் சேர்ந்த ,தொடக்க கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 90,000 ஆசிரியர்கள் ,அலுவலர்களுக்கு உடனே வழங்க வேண்டும் . 4) பின்னேற்பு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் களைய . இயக்குனர் கடிதம் 023558/இ1/06.08.14 க்கு முன் ,உரிய முன் அனுமதி இன்றி பயின்ற தொடக்க கல்வி துறையில் உள்ளஆசிரியர்கள் அனைவருக்கும் பின்னேற்பு வழங்கிட வேண்டும். இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள். 1) விலையில்லா பொருள்களை ஒரே பருவத்திற்கு மொத்தமாகவோ அல்லது ஒவ்வொரு பள்ளியிலுமோ நேரடியாக சேர்க்க வேண்டும். இதுதவிர வேறுஏதேனும் பொதுவான குறைகள் இருப்பினும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.9843156296 -ராபர்ட் ,மாநில பொது செயலாளர் SSTA. (இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் குறித்து நான்கு வழக்குகள் SSTA சார்பாக நடைபெற்று இறுதி விசாரணையில் உள்ளது அதுகுறித்து கவலை வேண்டாம் ,இறுதி வெற்றி நமதே) இதுதவிர பிற பொதுவான குறைகள் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம்.
2 comments:
Gd morn sir...thank you very much for ur service.one kind information and request...still nw in arialur union cps account slip didn't issue after 2009..pls take necessary action....
Pl contact this no-9843156296
Post a Comment